அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 56 பேர் பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் மருத்துமனைகளில் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 17,111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 56 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில், இன்று 8 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துமனைகளில் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 17,111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,711 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 265 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,869. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,76,291. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 49,017 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,949 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 46,934 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 134 பேர்.
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1753 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 43 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1480 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். இன்று 15 வயதிற்கு மேறபட்டவர்கள் 66 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.