அரியலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

அரியலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-10-01 15:56 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்று, கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 8 பேர். மருத்துமனைகளில் 93 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,345 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 495 பேர். இதுவரை 3,09,329 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,693 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,93,303 பேர்.

மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,487. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,07,390. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 40,046 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,849 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 38,085 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 122 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2109 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 1276 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 833 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News