அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 9 பேருக்கு கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-09-27 16:39 GMT

அரியலூர் மாவட்டத்தில்,  இன்று மட்டும் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 12 பேர். மருத்துமனைகளில் 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து 16,2302 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 665 பேர். இதுவரை 3,07,405 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,670 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,90,735 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,392. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,03,183. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 39,614 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,843 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,675 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 106 பேர் என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News