அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 2 பேர் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 2 பேர் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-12-16 15:16 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 2 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார். மருத்துவமனைகளில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,662 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 338 பேர். இதுவரை 3,44,676 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,938 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,27,738 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,57,336. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 46,522 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,889 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 44,532 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 101 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2330 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 120 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 2210 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News