அரியலூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிவாரண திட்டத்தில் உதவிகளை அமைச்சர் வழங்கினார்
அரியலூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிவாரண திட்டத்தில் பயனாளிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 15நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை,ஆதரவற்றோர் ஓய்வூதியம், தனிநபர் கழிவறை கட்டுதல், பாரதபிரதமரின் வீடுவழங்கும் திட்டம், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் காதொலி கருவி, தையல் இயந்திரம் உள்ளிட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் பயணாளிகளுக்கு வழங்கினார். அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், மாவட்ட எஸ்பி பாஸ்கரன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சந்திரசேகர் மற்றும் அரசு பல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.