மோட்டார் வாகனதிருத்த சட்டத்தை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன திருத்த சட்டத்தைக் கண்டித்து அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் விபத்து ஏற்படும் இடத்தில் தான் வழக்கு தொடர வேண்டும் எனவும் அதுவும் 6 மாதத்தில் வழக்கு தொடர வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே விபத்து ஏற்படுத்தும் நபர் எங்கு வசிக்கிறாரோ அங்கு வழக்கு தொடரலாம் அதே போல் கால கெடு இல்லாமல் வழக்கு தொடரலாம் என சட்டம் இருந்தது. ஆனால் இதனை மத்திய அரசு மாற்றியது கண்டத்திற்கூறியது என வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.