அரியலூர்: இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது

Update: 2022-05-14 07:38 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்ட கை, கால் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மற்றும் 75க்கு மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.

எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது 1)மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்தவம் வாய்ந்த அடையாள அட்டை நகல் (UDID),  2)குடும்ப அட்டை நகல், 3)ஆதார் அட்டை நகல் (தையல் பயிற்சி சான்று), 4)மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்:17, தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர்-621704 ல் 20.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைப்பெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்துக்கொள்ளவும் மற்றும் மேலும் விவரங்களுக்கு 04329-228840 எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Similar News