வேலை உறுதித்திட்டம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய அலுவலர் நியமனம்
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடர்பான குறைகளை நிவர்த்தி தெரிவிக்க குறைதீர் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக குறைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு குறைதீர் அலுவலராக எஸ்.வைத்தீஸ்வரன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக வரப்பெறும் புகார்களை பரிசீலனை செய்து 30 நாட்களுக்குக்குள் நடவடிக்கை மேற்கொள்வார்.
எனவே, பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட செயலாக்கம் தொடர்பான புகார்களுக்கு குறைதீர் அலுவலர் எஸ்.வைத்தீஸ்வரன் என்பவரை மாவட்ட ஆட்சியரகம், இரண்டாம் தளம், அறை எண்.126, தொலைபேசி எண்.9443322844 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudsman.ariyalur@gmail.com தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.