ஜெயங்கொண்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

ஜெயங்கொண்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Update: 2022-06-10 09:14 GMT
ஜெயங்கொண்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்த அதிமுகவினர்.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

நன்னிலத்தில் இருந்து வந்த தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் மாவட்ட செயலாளர் தாமரை.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், வெடி வெடித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதனையடுத்து தமிழக முன்னாள் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றார். அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News