அரியலூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு சில்லறை மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2022-02-21 14:51 GMT

டாஸ்மாக் மது பான கடை (பைல் படம்).

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்-2022, 19.02.2022 அன்று நடைபெற்று முடிந்து உள்ளது.அவற்றிற்கான வாக்குகள் எண்ணிக்கை 22.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு சில்லறை மதுபான கடைகள் மற்றும்  உரிமம் பெற்ற மதுக்கூடம் ஆகியவற்றிற்கு 22.02.2022 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News