அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவரும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டதிருத்த தொகுப்புகளை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

Update: 2022-04-23 07:13 GMT

அரியலூர் அண்ணா சிலை அருகே ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வரும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டதிருத்த தொகுப்புகளை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் ஜி.மணிவேல், திருமானூர் ஜி.ஆறுமுகம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News