செந்துறை அருகே அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அரியலூர் நகரில், செந்துறை புறவழிச்சாலை மற்றும் தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2022-04-10 06:30 GMT

தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொது மக்களுக்கு இளநீர், வெள்ளரி, தர்பூசணியை  அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் வழங்கினார்.

அரியலூர் நகரில் செந்துறை புறவழிச்சாலை மற்றும் தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தண்ணீர், மோர், இளநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு தாமரைக் குளம் ஊராட்சித் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணிச் செயலர் ஓ.பி.சங்கர், கட்சி நிர்வாகி கல்லங்குறிச்சி பாஸ்கர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News