அரியலூரில் டிப்பர் லாரி- பேருந்து மோதி விபத்து: 16 பேர் காயம்

அரசு பேருந்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் 16 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-03-01 12:45 GMT

விபத்துக்குள்ளான அரசு பஸ். 

அரியலூரில் இருந்து வேணாநல்லூர் கிராமத்திற்க்கு செல்லும் அரசு பேருந்து,  மதியம் சென்று கொண்டிருந்தபோது காட்டுபிரிங்கியம் என்ற இடத்தில்,  எதிரே வந்த  டிப்பர் லாரி மீது மோதியது. இதில்,  பேருந்தில் பயணம் செய்தவர்கள் மீது காயங்கள் ஏற்பட்டு,  அரசு பேருந்து அப்பளம் போல் மேற்கூரை நொறுங்கியது. அருகில் இருந்தவர்கள்,  பேருந்தில் பயணம் செய்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக,  அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு பெண் ஆபத்தான நிலையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பேருந்து ஓட்டுனர் கொளஞ்சியப்பன் உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News