அரியலூர் அருகே வெளிநாடு செல்ல இருந்த இளைஞர் வெட்டி கொலை

Today Murder News -அரியலூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகள் குறித்து கீழப்பழூவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-12 07:32 GMT

அரியலூர் அருகே கொலை செய்யப்பட்ட விக்னேஷ்.


Today Murder News -அரியலூர் அருகே வெளிநாடு செல்லவிருந்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து கீழப்பழூவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் இருந்து பொய்யூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. மல்லூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் இச்சாலை வழியாக தினந்தோறும் தங்களது வயல்வேலைக்கு செல்வது வழக்கம். இன்று காலை அவ்வழியாக சென்ற பொது மக்கள் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள திறந்தவெளியில் தலையில் வெட்டு காயத்துடன் ஆண் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பலத்த வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த சடலம் குறித்து கீழப்பழூவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற கீழப்பழூவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரபோஸ் தலைமையிலான போலீசார் இறந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு சோதனை செய்தனர்.


மேலும் கீழப்பழூவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபரின் விபரம் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்த வாலிபர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் மகன் விக்னேஷ் என்பதும், இவர் சிங்கப்பூருக்கு செல்வதற்காக மருத்துவ பரிசோதனைகள் முடிந்து விசாவிற்காக காத்திருந்தது தெரியவந்தது. மேலும் நேற்று இரவு விக்னேஷ் செல்போனிற்கு வந்த அழைப்பின் பேரிலேயே, வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து விக்னேஷ் இறந்து கிடந்த இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில் மது பாட்டில்களும் தண்ணீர் பாட்டில்களும் இருந்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் துப்பறியும் மோப்பநாய் பிரிவினரும், தடயஅறிவியல் பிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். தடயஅறிவியல் நிபுணர்கள் மதுபாட்டில்கள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த விரல் ரேகைகளை சேகரித்துள்ளனர். மேப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம்வரை சென்று நின்றுவிட்டது. இதனையடுத்து அப்பகுதியில் வாகனங்கள் வந்ததற்கான அறிகுறிகள் உள்ளனவா என்று போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்.

மேலும் போலீசார் மது போதையில் ஏற்பட்ட தகராறில் விக்னேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதேனும் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த வாலிபரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக   அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்ததும் பொய்யூர் கிராமத்தில் இருந்து விக்னேஷின் உறவினர்களும், அக்கிராம மக்களும் சம்பவ இடத்தில் குவிந்தனர். விக்னேஷின் உடலைக்கண்ட உறவினர்கள் கதறிதுடித்தனர். மேலும் அருகில் உள்ள மல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்களும் சம்பவ இடத்தில் கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags:    

Similar News