அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 9 பேர் பாதிப்பு

இன்று கொரோனாவால் 9 பேர் பாதிப்பு. ஒருவர் குணமடைந்துள்ளனர். மருத்துமனைகளில் 28 பேர் சிகிச்சை இன்றுவரை 16,979 பேர் பாதிப்பு

Update: 2022-01-07 15:32 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 9 பேர் பாதிப்பு. இன்று ஒருவர் குணமடைந்துள்ளனர். மருத்துமனைகளில் 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,686 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 265 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 382 பேர். இதுவரை 3,51,030 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,979 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,34,051 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,785. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,70,993. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 48,364 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,895 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 46,361 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 108 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 4665 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 44 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1284 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். இன்று 15 வயதிற்கு மேறபட்டவர்கள் 3307 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Tags:    

Similar News