அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 355 மனுக்கள்

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 355 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.

Update: 2022-07-11 12:10 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (11.07.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 355 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News