அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-14 16:28 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் (14ம் தேதி) கொரோனாவால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 14 பேர். மருத்துமனைகளில் 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,144 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 252 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 914 பேர். இதுவரை 2,97,845 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,535 பேர், நோய் தொற்று இல்லாதவர்கள் 2,81,310 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,126. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,90,463. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 38,355 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,819 பேர். நோய் தொற்று இல்லாதவர்கள் 36,435 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 101 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 3558 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 2398 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1160 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News