அரியலூர் மாவட்டத்தில் 10 ஊரக வளர்ச்சி ஒன்றிய ஆணையாளர்கள் பணியிடமாற்றம்

அரியலூர் மாவட்டத்தில் 10 ஊரக வளர்ச்சி ஒன்றிய ஆணையாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-05-23 14:16 GMT

ஆட்சியர் ரமண சரஸ்வதி.

அரியலூர் மாவட்டத்தில் 10 ஊரக வளர்ச்சி ஒன்றிய ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசு செந்துறை யூனியன் கமிஷனராகவும், செந்துறை யூனியன் கமிஷனர் சந்தானம் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி அரியலூர் யூனியன் கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அரியலூர் யூனியன் கமிஷனர் அகிலா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் நாராயணன் ஆண்டிமடம் யூனியன் கமிஷனர் ஆகவும், ஆண்டிமடம் யூனியன் கமிஷனர் அருளப்பன் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி செந்துறை யூனியன் கமிஷ்னராகவும் இடமாற்றமாகி உள்ளனர்.

செந்துறை யூனியன் கமிஷனர் அமிர்தலிங்கம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், தா.பழுர் யூனியன் கமிஷனர் ஜெயராஜ் திருமானூர் யூனியன் கமிஷனர் ஆகவும், திருமானூர் யூனியன் கமிஷனர் செந்தில்குமார் தா.பழுர் யூனியன் கமிஷனர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News