பதட்டமான வாக்குச்சாவடிகள்- எஸ்பி ஆய்வு

Update: 2021-03-10 05:45 GMT

அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்பி பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 83 பகுதிகள் பதட்டமான பகுதிகளாகவும்,அதில் 185 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு, அங்கு தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் அரியலூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருத்துகாரன்பட்டி, தாமரைக்குளம், ஓட்டகோவில், சாலையக்குறிச்சி மற்றும் அரியலூர் மான்போர்ட் ஸ்கூல் ஆகிய 5 இடங்களில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையங்களை அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் பார்வையிட்டார். காவல் அதிகாரிகளுடன் எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வருகை, வாகனம் நிறுத்துமிடம், வாக்குச்சாவடி உள்ள இடம், கண்காணிப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News