கேஸ் சிலிண்டர் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க கேஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

Update: 2021-03-09 07:45 GMT

அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க கேஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், வாக்காளர் வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ரத்னா விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News