போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

Update: 2021-02-09 09:30 GMT

அரியலூர் அண்ணா சிலையருகே 8 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் ங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அரியலூர் அண்ணா சிலையருகே எட்டாவது நாளாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 7 ஆண்கள், 24 பெண்கள் உள்ளிட்ட 31 அரசு ஊழியர் சங்கத்தினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் அனைத்து துறை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News