விவசாயிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Update: 2021-02-08 07:15 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆடு திருடிய வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதியை சேர்ந்தவர் பக்ருதீன் (21). இவர் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி மீன்சுருட்டி அருகே வீரசோழபுரத்தில் விவசாயியை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, ஆடு திருடிய வழக்கில் மீன்சுருட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது அடிதடி வழக்கு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன.

எனவே இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பக்ருதீனை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட எஸ்பி., சீனிவாசன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா குண்டர் சட்டத்தில் பக்ருதீனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பக்ருதீனிடம், ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழங்கினார்.

Tags:    

Similar News