விவசாய கடன்கள் தள்ளுபடி- அதிமுக கொண்டாட்டம்

Update: 2021-02-05 11:00 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரூ.12,410 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து அதிமுக-வினர் வெடி வெடித்து கொண்டாட்டினர்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், கொரோனா காலங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அதிமுக நகரச்செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் வெடி வெடித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டனர்.

Tags:    

Similar News