‘இனி, ஜெ., இடத்தில் இபிஎஸ்...தான்’ - அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை, தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், இபிஎஸ் தரப்பு அதிமுகவினர் உற்சாகத்தில், கொண்டாடி வருகின்றனர்.

Update: 2023-07-11 06:19 GMT

AIADMK general secretary EPS- அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது. (கோப்பு படம்)

AIADMK general secretary EPS- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு, அதிமுகவில் யார் பொதுச் செயலாளர் என்பதில் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கால், கட்சிக்குள் பலத்த குழப்பம் ஏற்பட்டது. இபிஎஸ், ஓபிஎஸ் என இரண்டு அணிகளாக அதிமுகவினர் பிரிந்து நிற்கும் சூழல் உருவானது.  இந்த சூழ்நிலையில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமையிலான அணியே அதிமுக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.

பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் யார் என்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் தேர்தல் ஆணையம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுக்குழு தொடர்பாக கடந்த 30-5-2023 அன்று இபிஎஸ் தரப்பில் இருந்து அதிமுகவின் பொதுக்குழு அடிப்படையில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்னன்ன என்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கும் வகையில் ஒரு கடிதம் அனுப்பபட்டது.

அந்த கடித்ததில் அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிக்கு யார் யாரெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பன குறித்த விவரங்கள், அந்த கடிதத்தில் அதிமுக தரப்பில் எடப்பாடி குழுவினர் அனுப்பி இருந்தனர்.

அதிமுக கொடுத்த இந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக உறுதியாகிறது.

அதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இபிஎஸ் தரப்பு ஆவணங்களும் அந்த இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை முழுமையாக அங்கீகாரம் செய்ததை காட்டுகிறது. இனிமேல் நீதிமன்ற தீர்ப்புகள் வந்தால் ஏதேனும் மாறுபாடு இருக்குமே தவிர, அதுவரை தற்போது போல கட்சி செயல்படும் என்பதும் தெரிய வருகிறது.

Tags:    

Similar News