அவமானம் தோல்வியல்ல..வெகுமானம்..! வாழ்க்கைப் பாடங்கள்..!

Avamanam in Tamil-ஒரு மனிதன் அவமானப்படுகிறான் என்றால் அது அவனுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது, என்பது பொருள்.

Update: 2022-09-22 09:56 GMT

Avamanam in Tamil

Avamanam in Tamil

வீழும்போதுதான் விதைகள் முளைக்கின்றன. அவமானங்களை வெகுமானங்களாக மாற்றிக்கொள்கின்றவனே வெற்றியாளன் ஆகிறான். தோல்வியில் வீழ்ந்துவிட்டோம் என்று முடங்கிக்கிடப்பவன் கொடிய நோய்க்கு ஆளானவனைவிட மோசமாக பாதிக்கப்படுவான். எழுந்து நின்றால் மட்டுமே ஏணியைப்பிடிக்க முடியும். தடுப்புகளை படிக்கற்களாக மாற்றுபவன் சாதனையாளன். நம்பிக்கை உள்ளவனுக்கு மலை கூட சிறுகல்தான். முடங்கியவனுக்கு சிலந்தி வலை கூட பாறாங்கல் தான். அவமானங்கள் பாடங்களைக் கற்றுத்தரும் நூலகம். அவமானங்கள் ஒரு மனிதனை செதுக்கும் உளி.

  • சில அவமானங்கள் தான் நம்மை சரியாக வாழக் கற்றுக் கொடுக்கின்றன.
  • தேடிச் சென்று உன் அன்பை நிரூபிக்க நினைக்காதே ஆசையாய் போனால் அவமானம் தான் மிஞ்சும்.
  • அவமானத்தை அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள்..அவமான படுத்த ஒருவன் இல்லை என்றால் நமக்கு

தன்மானம் என்ற ஒன்று தெரிந்திருக்காது.

  • மறதியால் ஏற்படும் அவமானம் சிறந்த ஞாபக சக்தியை உருவாக்கும்.

Avamanam in Tamil

  • அலட்சியம் செய்பவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் அன்பைத் தேடுவதில் அவமானத்தை தவிர

வேறு எதுவும் கிடைத்துவிடாது..!

  • அடுத்தவனைப் போல இருக்க ஆசைப்படாதே..உனக்கென்று தனித்துவம் உண்டு.. நாயைப் பார்த்து சிங்கமும்

குரைத்தால் அவமானம் தான் மிஞ்சும் கவனமாக இரு.

  • நம்மை யார் என்று நமக்கே தெரியப்படுத்த தேவைப்படும் ஒரு ஆயுதம் தான் அவமானம்..!
  • அவமானங்களால் மட்டுமே வாழ்க்கையில் அதிக தெளிவு கிடைக்கின்றது..சிலரை புரிந்து கொள்ளவும்

முடிகிறது.

Avamanam in Tamil

  • உன்னை நீயே செதுக்கிக் கொள், உளியால் அல்ல..அவமானங்களால்..ஏனென்றால் உளியை விட

அவமானம் கூர்மையானது.

  • அவமானங்கள் பலரை வீழ்த்திடவும் செய்கிறது..சில நேரங்களில் உயர்த்திடவும் செய்கிறது..

பொறுமை மற்றும் மன உறுதியுடன் செயல்பட்டால் அவமானம் கூட வெகுமானமாய் மாறிவிடும்.

  • காரணம் இல்லாமல் உங்களை விட்டு விலகிச் சென்றவர்களிடம் சென்று காரணம் கேட்பது நமக்கு நாமே

அவமானத்தை தேடிக் கொள்வதற்கு நிகரானது.

  • அவமானங்களை சேகரித்து வை. உன்னை அவமானம் செய்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க.

Avamanam in Tamil

  • அவமானம் மட்டுமே ஒருவனை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும். அவமானங்கள் மட்டுமே ஒருவனை

அறிவாளியாக மாற்றும்.

  • வாழ்க்கையில் தடுமாறி விழுந்தவனுக்கு ஆறுதல் கூறாவிட்டாலும் அவமானம் செய்யாதே..! நாளை

நீயும் தடுமாறலாம்..தடம் மாறலாம்..!

  • மற்றவர்கள் நம்மை அவமானப்படுத்தும் போது அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில்

இருந்து தான் நம் வாழ்க்கை ஆரம்பமாகின்றது.

  • தெரியாத ஒரு விஷத்தை தெரிந்து கொள்வது அவமானம் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே அவமானம்.

Avamanam in Tamil

  • தன்னைத் தானே சரி செய்து கொள்ளுங்கள். அதை விட சிறந்த மாற்றம் உலகில் எதுவுமில்லை.
  • தோல்வி என்பது அவமானம் அல்ல.. வெற்றி என்பது மகுடம் அல்ல..இவ்விரண்டும் வாழ்க்கையை புரிய

வைக்கும் பாடங்கள்.

  • வாழ்க்கையை வாழ்வதில் சிறு மழலை போல் இரு. அதற்கு அவமானம் தெரியாது; விழுந்தவுடன்

அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்.

Avamanam in Tamil

  • உன்னை கேலியும் கிண்டலும் செய்து அவமானம் செய்பவர்களின் சொற்களும் செயல்களும்தான் தளர்ந்து போன உன் உணர்ச்சியைத் தூண்டி உன்னை சாதிக்க வைக்கும்.
  • உன் புருவம் உயரும் நேரத்தில் புரிந்து கொண்டேன், இனியும் புறம் காட்டி ஓடினால் எனக்கு அவமானம்

என்று..!

  • தோல்வி அடையும் போது வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே தோன்றுகிறது. அவமானம் அடையும் போது தான் சாதித்து நம் அடையாளத்தை காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.

Avamanam in Tamil

  • நிராகரிப்பு எவ்வளவு பெரிய வலி, அவமானம் என்பது அடுத்தவர்கள் நம்மை நிராகரிக்கும் போது தான் புரிய வரும்.
  • வந்ததை வரவில் வைத்து சென்றதை செலவில் வைத்து இருப்பதை கொண்டு மனநிறைவோடு

இன்பமாக வாழ்வோம்.

  • அந்தந்த நேரங்களில் அனைவரும் ஏற்கும்படியான ஒரு நல்ல கதை சொல்லத் தெரிந்தால்

நானும் நல்லவள் தான் போல

  • எவ்வளவு முறை காயப்பட்டாலும், எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதை ஏற்று கொள்ளவே முடியாது..
  • ஏமாற்றி பிழைப்பது புத்திசாலித்தனம் ஆகிவிட்டதால், நேர்மையாக வாழ்பவன் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான்..

Avamanam in Tamil

  • அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை; அன்பை வைத்து ஏமாற்றியவர்கள் இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை...
  • இன்று என்னுடன் வானமும் அழுகிறது. என் கண்ணீர் துடைக்க இனி நீ வரப் போவதில்லை என்றுணர்ந்து.. நீ திரும்பி வர மாட்டாயா என..
  • நீ சென்ற பாதை யாவும் மனம் தேடுகிறது..எவ்வளவுதான் நேசிக்க பல காரணங்கள் ஏற்படுத்தினாலும், சில சமயங்களில் நிதானம் தவறிய கோப வார்த்தைகள், மிகுந்த வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது வாழ்கையில்..
  • நாம் ஏமாளியாக இருப்பது நமக்கு அவமானம் இல்லை..! நாம் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாமல் இருப்பதே நமக்கு பெருமை..

Avamanam in Tamil

  • ஏமாற்றம் என்பது எனக்கு அவமானமில்லை.. இனி அடுத்தவரிடம் எச்சரிக்கையாய் பழக ஓர் அலாரம்..!
  • "ஏமாற்றியவர்களுக்கு நன்றி" அவர்கள் ஏமாற்றத்தை சொல்லி தரவில்லை..அவமானப்படுத்தி இனி ஏமாறாமல் இருக்க அனுபவத்தை தந்து இருக்கிறார்கள்.
  • யாவுமாய்... எப்போதும் ஆறுதலாக இருந்த ஒருவர்... இனி நம்மோடு இல்லை என்பதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது..
  • கத்தியால் குத்தினால் கூட ஒரு நிமிடம் தான் வலி, ஆனால் அன்பை காட்டி ஏமாற்றினால் ஒவ்வொரு நிமிடமும் "வலி" தான்.

Avamanam in Tamil

  • எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதே..! ஏனென்றால் எதிர்பார்ப்பதால் மட்டுமே நாம் ஏமாற்றத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகிறோம்.
  • எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல...
  • மறுக்க முடியாத மூன்று உண்மைகள்.. அன்பாய் இருந்தால் ஏமாளி, உண்மையாக இருந்தால் முட்டாள், நடித்தால் மட்டுமே நல்லவன்..
  • நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும். அன்று புரியும், நீ ஏமாற்றியது அவர்களை அல்ல, உன்னையே என்று...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News