sonia met sonipath womens at her residence ராகுல் காந்தி திருமணத்துக்கு பெண் பாருங்க சோனிபத் பெண்களிடம் சோனியா கோரிக்கை

sonia met sonipath womens at her residence அரியானா மாநிலம் சோனிபத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் டில்லியிலுள்ள சோனியா இல்லத்துக்கு வருகை தந்தனர்.

Update: 2023-07-30 07:40 GMT

டில்லியில்  அரியானா மாநில  பெண்களைச் சந்தித்த சோனியா மற்றும் ராகுல் காந்தி (கோப்பு படம்)

sonia met sonipath womens at her residence

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்திக்கு பெண் பாருங்க என டில்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த அரியானாவின் சோனிபத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகளிடம் ராகுலின் தாய் சோனியா கோரிக்கை விடுத்தார்.

இம்மாதம் 8ந்தேதியன்று ராகுல்காந்தி சோனிபத் மாவட்டத்திலுள்ள மதினா கிராமத்துக்கு விசிட்செய்தார். அப்போது அங்கிருந்த பெண் விவசாயிகளிடம்ராகுல் நேரடியாக உரையாடினார். பெண் விவசாயிகள் கொண்டு வந்த உணவினை அருந்தியதுடன் அங்கிருந்த டிராக்டரையும் ஓட்டினார். பின்னர் அப்பெண்களிடம் டில்லியில் உள்ள தனது இல்லத்துக்கு வரும்படி அ ழைப்புவிடுத்திருந்தார். ஆனால் அவர்களோ அது சாத்தியமில்லை என தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ராகுலின் தாய் சோனியா அப்பெண்களுக்கு டில்லியில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கான ஏற்பாடுசெய்யப்பட்டது. கடந்த சனியன்று டில்லியில் உள்ள சோனியாவின் இல்லத்துக்கு சென்றனர்.

sonia met sonipath womens at her residence


சோனியா இல்லத்துக்கு சென்ற பெண்கள் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டதோடு அனைவரும் அங்கிருந்த ராகுல் , பிரியங்கா, சோனியா ஆகியோருடன் பேசினர். அப்போது பெண் விவசாயி ஒருவர் ராகுல் காந்திக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வையுங்க என சோனியாவிடம் தெரிவித்தார். அதற்கு சோனியா பதிலளிக்கும்போது அவருக்கு நீங்களே பெண் பாருங்க என்றார். அதற்கு ராகுல் காந்தி அது சாத்தியம்தான் ...பாருங்க எ ன்றார்.

பிரியங்கா காந்தி பேசும்போது, சிறுவயதில் ராகுல் காந்தி என்னைவிட அதிக குறும்பு செய்வார். ஆனால் என்னைத்தான் அதிகமாக பெற்றோர்கள் திட்டுவார்கள் என்றார்.

இதுகுறித்து ராகுல்காந்தி ட்விட்டரில் சில விசேஷமான விருந்தினர்களுடன் நான் , அம்மா, பிரியங்கா ஆகியோர் இன்று மறக்க முடியாத நாள் . சோனிபத்தினைச் சேர்ந்த விவசாய சகோதரிகள் டில்லிக்கு வருகை. எங்கள் இல்லத்தில் அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டதுடன் நிறைய பேசினோம். பசு நெய், இனிப்பு லஸ்ஸி, வீடுகளில் செய்யப்பட்ட ஊறுகாய், ஆகியவற்றை அவர்கள் கொண்டு வந்திருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் வெ ளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் சோனிபத்தைச் சேர்ந்த விவசாய சகோதரிகளை டில்லிக்கு அழைத்து வருவதாக ராகுல்காந்தி ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி அவர்கள் டில்லி வந்தனர். அந்த வாக்குறுதி நிறைவேறியது என தெரிவித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்திக்கு பெண் பாருங்க என டில்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த அரியானாவின் சோனிபத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகளிடம் ராகுலின் தாய் சோனியா கோரிக்கை விடுத்தார்.

sonia met sonipath womens at her residence


இம்மாதம் 8ந்தேதியன்று ராகுல்காந்தி சோனிபத் மாவட்டத்திலுள்ள மதினா கிராமத்துக்கு விசிட்செய்தார். அப்போது அங்கிருந்த பெண் விவசாயிகளிடம்ராகுல் நேரடியாக உரையாடினார். பெண் விவசாயிகள் கொண்டு வந்த உணவினை அருந்தியதுடன் அங்கிருந்த டிராக்டரையும் ஓட்டினார். பின்னர் அப்பெண்களிடம் டில்லியில் உள்ள தனது இல்லத்துக்கு வரும்படி அ ழைப்புவிடுத்திருந்தார். ஆனால் அவர்களோ அது சாத்தியமில்லை என தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ராகுலின் தாய் சோனியா அப்பெண்களுக்கு டில்லியில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கான ஏற்பாடுசெய்யப்பட்டது. கடந்த சனியன்று டில்லியில் உள்ள சோனியாவின் இல்லத்துக்கு சென்றனர்.

சென்ற பெண்கள் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டதோடு அனைவரும் அங்கிருந்த ராகுல் , பிரியங்கா, சோனியா ஆகியோருடன் பேசினர். அப்போது பெண் விவசாயி ஒருவர் ராகுல் காந்திக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வையுங்க என சோனியாவிடம் தெரிவித்தார். அதற்கு சோனியா பதிலளிக்கும்போது அவருக்கு நீங்களே பெண் பாருங்க என்றார். அதற்கு ராகுல் காந்தி அது சாத்தியம்தான் ...பாருங்க எ ன்றார்.

பிரியங்கா காந்தி பேசும்போது, சிறுவயதில் ராகுல் காந்தி என்னைவிட அதிக குறும்பு செய்வார். ஆனால் என்னைத்தான் அதிகமாக பெற்றோர்கள் திட்டுவார்கள் என்றார்.

இதுகுறித்து ராகுல்காந்தி ட்விட்டரில் சில விசேஷமான விருந்தினர்களுடன் நான் , அம்மா, பிரியங்கா ஆகியோர் இன்று மறக்க முடியாத நாள் . சோனிபத்தினைச் சேர்ந்த விவசாய சகோதரிகள் டில்லிக்கு வருகை. எங்கள் இல்லத்தில் அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டதுடன் நிறைய பேசினோம். பசு நெய், இனிப்பு லஸ்ஸி, வீடுகளில் செய்யப்பட்ட ஊறுகாய், ஆகியவற்றை அவர்கள் கொண்டு வந்திருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் வெ ளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் சோனிபத்தைச் சேர்ந்த விவசாய சகோதரிகளை டில்லிக்கு அழைத்து வருவதாக ராகுல்காந்தி ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி அவர்கள் டில்லி வந்தனர். அந்த வாக்குறுதி நிறைவேறியது என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News