சிறுவாபுரி முருகன் கோவிலில் நடந்தது என்ன? மனம் திறந்தார் நடிகர் யோகிபாபு

சிறுவாபுரி முருகன் கோவிலில் நடந்தது என்ன? என்பது பற்றி நடிகர் யோகிபாபு மனம் திறந்து வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.

Update: 2023-08-09 10:53 GMT

நடிகர் யோகிபாபுவிற்கு கை கொடுக்காமல் ஆசீர்வாதம் வழங்கிய கோவில் குருக்கள்.

Yogi Babu Temple Issue, Yogi Babu Reveals Truth About Murugan Temple Incident,தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் யோகி பாபு. இவர் நடிகர் விஜய் உடன் மெர்சல் மற்றும் பேய் மாமா உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மட்டுமல்ல முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நடிகை நயன்தாராவுடன் இவர் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நினைவில்  நிற்கத்தக்க ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


Yogi Babu Temple Issue, Yogi Babu Reveals Truth About Murugan Temple Incident,யோகி பாபுவின் அடையாளமே அவரது பம்பை தலை முடி அழகும் பம்ப்லி மாஸ் உடல் அழகும் தான். அந்த வகையில் அவரது உடல் மொழி அழகு ஒரு தனித்துவ அடையாளமாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தொடர்பான ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ஓடிக்கொண்டு இருந்தது. அது பற்றி அவர் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார்.

அது என்ன காட்சி தெரியுமா? நடிகர் யோகி பாபு கழுத்து நிறைய மாலையுடன் ஒரு கோவிலுக்கு செல்கிறார். கோவில்  குருக்களை பார்த்து வணக்கம் சொல்கிறார். கை கொடுப்பதற்காக கையை நீட்டுகிறார். ஆனால் கோவில் குருக்கள் பதிலுக்கு கையை நீட்டாமல் வணக்கம் மட்டும் சொல்லி ஆசீர்வாதம்  செய்கிறார். இதுதான் அந்த காட்சி.


Yogi Babu Temple Issue, Yogi Babu Reveals Truth About Murugan Temple Incident,இதற்கு நெட்டிசன்கள் கதை வசனம் எழுத தொடங்கி விட்டனர். அந்த கோவிலில் நடிகர் யோகி பாபுவிற்கு தீண்டாமை கொடுமை நடந்துள்ளது. பெரிய நடிகராக இருந்தாலும் தீண்டாமை அவரை விட்டு வைக்கவில்லை .கோவிலில் இது நடக்கலாமா என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் ஏராளமாக உலாவிக் கொண்டு இருந்தன.

Yogi Babu Temple Issue, Yogi Babu Reveals Truth About Murugan Temple Incident,இந்த சூழலில் தற்போது இந்த தீண்டாமை கொடுமை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் நடிகர் யோகி பாபு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் சிறுவாபுரி  பாலசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நான் பல ஆண்டுகளாக சென்று வருகிறேன். நான் மோட்டார் சைக்கிள் வாங்கிய காலத்தில் இருந்து அங்கு சென்று  சுவாமி தரிசனம் செய்து வருகிறேன். அந்த கோயில் குருக்கள் மிகவும் நல்லவர். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. யாரோ வேண்டும் என்றே வீடியோ எடுத்து  இதை பரப்பி விட்டு இருக்கிறார்கள். கோவில் குரூக்கள் மிகவும் நல்லவர் மற்றபடி இதில் ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சனைக்குரிய இந்த கோவில் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஆகும். மேலும் கோவில் குருக்களிடம் நடிகர் யோகி பாபு பேசுவது போன்ற காட்சிகளும் உள்ளன. அதனால் ஆடியோ தான் வரவில்லை. எப்படியோ தன்னை தொடர்பு படுத்தி வெளியான  இந்த தீண்டாமை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் நடிகர் யோகி பாபு.

Tags:    

Similar News