நிலைக்க முடியாத தெலுங்கு சினிமா.. நடிகை அமலா பாலின் ஆதங்கம்

Nepotism in Telugu Film Industry- தெலுங்கு சினிமா சில குடும்பங்களின் பிடியில் சிக்கியுள்ளதாக நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-13 07:30 GMT

நடிகை அமலாபால்.

Nepotism in Telugu Film Industry-தமிழ், மலையாள திரைத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பின்னர் தெலுங்கு சினிமாவை விட்டு விலகினார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிக்காததற்கு நடிகை அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நான் தெலுங்கில் நடிக்க வந்தபோது தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்களின் பிடியில் இருப்பது புரிந்தது. அந்த குடும்ப நடிகர்களும், அவர்களின் ரசிகர்களும் தெலுங்கு சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

actress amala paul complains about telugu film industry

நான் தெலுங்கில் நடித்தபோது படங்கள் வித்தியாசமாகவும், படங்கள் அனைத்திலும் இரு கதாநாயகிகள் நடிப்பார்கள். கதாநாயகிகளை கேவலம் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். சில காதல் காட்சிகள் பாடல் காட்சிகளில் மட்டுமே கதாநாயகி வருவார். படம் முழுவதும் கதாநாயகன் தான் ஆக்கிரமிப்பார்.

இதன் காரணமாகத்தான் என்னால் தெலுங்கு சினிமாவில் நிலைக்க முடியவில்லை. அதே நேரத்தில தமிழ் சினிமாவில் நடிப்பது எனது அதிர்ஷ்டம். மைனா படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது. மைனாவுக்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. பெரிய நடிகர்களுடன் கூட இணைந்து நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்தன என்று அமலாபால் தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News