தயாராகி வருகிறது ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகம்

Rajini Murugan Padam-நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

Update: 2022-11-26 09:05 GMT

Rajini Murugan Padam-நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சி ஜே. ஜே.பொறியியல் கல்லூரியில் படித்தவர். இவரது தந்தை தமிழக சிறைத்துறையில் அதிகாரியாக இருந்தார். கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே சிவகார்த்திகேயனுக்கு திரைத்துறையில் நாட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக கல்லூரி விழாக்களுக்கு பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுடன் நல்ல அணுகுமுறை ஏற்படுத்திக் கொண்டு முதலில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார்.

தொகுப்பாளர் பணியில் கிடைத்த அறிமுகத்தை தொடர்ந்து திரை துறையில் காலடி பதித்தார். சில படங்களில் துணை நடிகராக வந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் தான் சிவகார்த்திகேயனுக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. இதன் மூலம் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற அவரது பல நாள் கனவிற்கு தீர்வு கிடைத்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமை ராஜா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.அதிலும் பெண் ரசிகர்கள் அவருக்கு மிக அதிகம்.தனது நடிப்பு திறமையால் படிப்படியாக உயர்ந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு பிரபலம் அடைந்தார்.

அவர் அடித்த ரஜினி முருகன் படம் தமிழ் திரை உலகில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சிவகார்த்திகேயனின் அறிமுக இயக்குனரான பொன்ராம் தற்போது அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். மகன் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வியை தழுவியது. தற்போது அவர் விஜய் சேதுபதி நடிப்பில் டி.எஸ்.பி. என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் பொன்ராம் அளித்துள்ள ஒரு பேட்டியில் விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ரஜினி முருகன் இரண்டாம் பாகம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது இதில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன், சூரி ஆகிய இருவருமே இரண்டு வேடங்களில் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா நாயகிகளாக நடிக்க சத்யராஜ், ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News