நயன்தாரா கேட்ட சம்பளம்; ஆடிப்போன தயாரிப்பாளர் கோலிவுட்டில் லேட்டஸ்ட் டாக் இதுதானுங்கோ...

நயன்தாரா நடிக்கும் தனது 75 படத்துக்கு கேட்ட சம்பளத்தால், ஆடிப்போன தயாரிப்பாளர், தர மறுத்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

Update: 2022-08-09 16:17 GMT

நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.  17  ஆண்டுகளுக்கு முன், ஐயா படத்தின் மூலம் சரத்குமார் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பின் ரஜினி, விஜய், அஜீத், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா, முன்னணி நாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில், விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தன் கலைச்சேவையை தொடர்கிறார்.

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளிலும் நயன்தாராவுக்கு  மவுசு உள்ளதால், அங்கும் அவரது நடிப்பு சேவை தொடர்கிறது. நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில்  நடிக்கும் நயன்தாரா, தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார்.

டைரக்டர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படமான 'ஜவான்' படத்தில் நாயகியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் நயன்தாராவிற்கு சம்பளமாக ஐந்து கோடி பேசப்பட்டுள்ளது. இதையடுத்து நயன்தாரா, தமிழில் தனது 75 வது படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா கிட்டத்தட்ட பத்து கோடி சம்பளம் கேட்டதாகவும், அதனை தர தயாரிப்பாளர் மறுத்ததாகவும்  தகவல் வந்துள்ளது.

பாலிவுட் திரையுலகில் பிரபல நாயகியான தீபிகா படுகோனே, பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.  நயன்தாரா தான் தயாரிக்கும் படங்களை தவிர, மற்ற தயாரிப்பாளர்களின் படங்களின் ப்ரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை. எனவே அவருக்கு பத்து கோடி சம்பளம் தர முடியாது என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறிவிட்டாராம். இதன் காரணமாக நயன்தாரா 'அப்செட்'டில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Similar News