குழந்தையாக இருந்த போது, விளையாட பொம்மை இல்லை - ராஷ்மிகா உருக்கம்

rashmika mandanna struggle story- குழந்தையாக இருந்த எனக்கு ஒரு பொம்மை வாங்கி தரக்கூட என் பெற்றோருக்கு வசதியில்லை என, தனது வறுமை குறித்து உருக்கமாக கூறியிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Update: 2022-11-17 08:57 GMT

rashmika mandanna struggle story-  - நடிகை ராஷ்மிகா மந்தனா

rashmika mandanna struggle story, rashmika mandanna childhood story- நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். 'புஷ்பா' படத்தை தொடர்ந்து, தமிழில் கார்த்தியுடன், 'சுல்தான்' படத்தில் நடித்தார். தற்போது தளபதி விஜய் ஜோடியாக, 'வாரிசு' படத்தில், நடித்திருக்கிறார். 

இந்நிலையில், 'வீட்டு வாடகைக்கு கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டோம்,' என்று நடிகை ராஷ்மிகா மந்தனா, தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பண கஷ்டங்களை, வறுமையான வாழ்க்கையை தற்போது வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.


தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்' படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா இப்போது விஜய் ஜோடியாக, 'வாரிசு' படத்தில் நடிக்கிறார். இதனால், தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகையாக உள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 'புஷ்பா' படம், இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான, 'சீதாராமம்' படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது. அதற்கு முன்பு, 'கீதா கோவிந்தம்' படத்திலும், இவரது நடிப்பு பல தரப்பிலும் ரசிக்கப்பட்டது.

முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகாவுக்கு,  இப்போது கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது. ஒரு படத்துக்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். சினிமாவில் நடிக்க வந்த சில ஆண்டுகளில், கர்நாடகாவில் ராஷ்மிகா, நிறைய சொத்துகள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையும் நடந்தது. 


இந்நிலையில், தனக்கு சிறுவயதாக  இருந்த போது ஏற்பட்ட பண கஷ்டங்களை ராஷ்மிகா மந்தனா தற்போது வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ராஷ்மிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில், ''எனது சிறுவயதில், பெற்றோர் பண நெருக்கடியில் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் கையில் பணம் இருக்காது. குடும்பத்தில் கஷ்டம் நிலவியது. வீட்டு வாடகை கொடுக்கவும் பணம் இல்லாமல் சிரமப்பட்டோம். இரு மாதங்களுக்கு ஒரு தடவை வீடு மாறும் அளவுக்கு கஷ்ட நிலைமை இருந்தது. பெற்றோரால், எனக்கு ஒரு பொம்மை கூட வாங்கி தர முடியவில்லை" என, கூறியிருக்கிறார்.


பெரும்பாலான நடிகர், நடிகைகள் தங்களது குடும்ப பின்னணி குறித்து, வெளிப்படையாக பேச மாட்டார்கள். அப்படியே பேசினாலும், தங்களை வசதியான மனிதர்களாக, செல்வ செழிப்பாக வாழ்பவர்களாகவே காட்டிக்கொள்வர். கடந்தகால கஷ்டங்களை சொல்வதால், தங்களது சினிமா 'இமேஜ்' கெட்டுவிடும் என, உண்மையை பேச மாட்டார்கள். ஆனால், ராஷ்மிகா முன்னணி நடிகையாக வளர்ந்தும், கோடி கோடியாக பணம் சம்பாதித்தும் தனது கடந்த கால வாழ்க்கையை, குறிப்பாக வீட்டு வாடகை தர முடியாத கஷ்டத்தை, தனக்கு விளையாட ஒரு பொம்மை கூட வாங்கித்தர முடியாத பெற்றோரின் வறுமை நிலையை அவர் உண்மையாக வெளிப்படுத்தியது, சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News