புதிய தொழிலுக்கு மாறிய நடிகை பிரியா பவானி ஷங்கர்; ரசிகர்கள் ஆச்சரியம்

priya bhavani shankar latest news-நடிப்பு தொழிலுடன், மற்றொரு புதிய தொழிலுக்கு நடிகை பிரியா பவானி ஷங்கர் மாறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Update: 2023-01-24 06:58 GMT

priya bhavani shankar latest news- நடிகை பிரியா பவானி ஷங்கர்.

priya bhavani shankar started new restaurant business, priya bhavani shankar latest news- எப்போதுமே ஒரே தொழிலை நம்பிக்கொண்டு இருக்கக் கூடாது என்று சொல்வதுண்டு. ஒரு தொழிலில் நஷ்டம் அடைந்தாலும், மற்ற தொழில்கள் மூலம் லாபம் அடையலாம். நஷ்டத்தை ஈடுகட்டி விடலாம் என்பதே அதன் அடிப்படை.அதிக வருமானம் தரும் தொழிலில் இருந்தாலும், அதன்மூலம் கிடைக்கும் அதிக லாபத்தை வைத்து, கூடுதலாக வெவ்வேறு தொழில்களை உருவாக்கி கொள்ளலாம். இன்றைய சினிமா துறையில் உள்ள பல நடிகர்கள், நடிகைகளுக்கு நடிப்பு தவிர, வெவ்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து, அதன்மூலமும் வருமானம் ஈட்டுகின்றனர். சினிமா சார்ந்த மற்ற நிறுவனங்களில், முதலீடு செய்து லாபம் அடைகின்றனர்.


அந்த வகையில், நடிகை பிரியா பவானி ஷங்கர், இப்போது நடிகை என்பதோடு, ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் என்ற தொழில் அதிபராகவும் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். அழகிய தமிழ் பேசும் செய்தி வாசிப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்தவர்தான் பிரியா பவானி ஷங்கர். அதன்பின் நாயகியாக மக்களின் மனதை கொள்ளை கொண்டார். அவரது நடிப்பை பார்த்து, அவருக்கு குறுகிய காலத்திலேயே நிறைய ரசிகர்கள் உருவாகினர்.

'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற விஜய் டிவி சீரியலில் நடித்து மக்களின் பேராதரவை பெற்ற இவர் அப்படியே சினிமா பக்கமும் வந்தார். 'மேயாத மான்' படத்தில் முதன்முறையாக நாயகியாக நடிக்க தொடங்கிய பிரியாவின் பயணம் இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வரை வந்துள்ளது. அடுத்தடுத்து அவரது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.


கடைக்குட்டி சிங்கம், திருச்சிற்றம்பலம், மான்ஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த டிசம்பர் மாதம் கடற்கரை பக்கத்தில் புதிய வீடு வாங்கியதாக அறிவித்த நடிகை பிரியா பவானி சங்கர், இப்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளதாக வீடியோவுடன் பதிவு செய்துள்ளார். அதாவது, அவர் சொந்தமாக புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியுள்ளாராம், விரைவில் ரெஸ்டாரெண்ட் திறக்க இருக்கிறாராம். தனது ரெஸ்டாரண்ட்டை வீடியோவாக எடுத்து வெளியிட, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


அந்த காலத்தில் சந்திரபாபு, அசோகன் போன்ற பெரிய நடிகர்கள், பல படங்களில் நடித்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தனர். ஆனால், ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல், வறுமையில் கஷ்டப்பட்டனர். இறுதி நாட்களில், வருமானம் இல்லாமல் வறுமையில் போராடினர். ஆனால், இன்றைய சினிமா நடிகர், நடிகையர் அதுபோன்று இல்லாமல், சினிமா நடிப்பின் வாயிலாக, அதிக வருமானம் ஈட்டிய போதும், சினிமாவில் மட்டுமின்றி மற்ற தொழில்களிலும் ஈடுபட்டு, தங்களுக்கான ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்தி கொள்ளவும், செய்கின்றனர். இது, புத்திசாலித்தனமான ஒரு நடவடிக்கைதான் என்றுதான், பலரும் பாராட்ட செய்கின்றனர். 

Tags:    

Similar News