ஓராண்டாக 'ஜோக்கர்' இயக்குநரை 'வெயிட்டிங்' கில் வைத்த கார்த்தி

Karthi Recent News- நடிகர் கார்த்தி நடித்த படங்களின் தொடர் வெற்றிகளால், ஓராண்டாக இயக்குநர் ராஜூ முருகன் காத்திருக்கும் நிலை ஏற்பட்ட நிலையில், தற்போது அவரது இயக்கத்தில், கார்த்தி நடிக்கிறார்.

Update: 2022-11-10 06:25 GMT

karthi latest news- ஓராண்டு காத்திருப்புக்கு பின், ராஜூ முருகன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிக்கிறார்.

Karthi Recent News-நடிகர் கார்த்திக்கு, துவக்கத்தில் இருந்தே இந்த ஆண்டு, சிறப்பாகவும், அமோகமாகவும் இருக்கிறது. அவர் நடிப்பில் வெளிவந்த 'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' என மூன்று படங்களும் ரசிகர்களை கவர்ந்து, வசூலிலும் சாதனை படைத்தது. அதிலும் தீபாவளிக்கு வெளிவந்த, 'சர்தார்' படம் நூறு கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இதனால் கார்த்தி, தற்போது பயங்கர 'பிஸி' ஆன நடிகராக மாறி இருக்கிறார்.


இவரிடம் கதை சொல்வதற்காக, இயக்குநர்கள் பலரும் வரிசையில் காத்து நிற்கின்றனர். அது மட்டுமின்றி, 'பொன்னியின் செல்வன்' 2ம் பாகம், 'கைதி' 2ம் பாகம்  படங்களுக்காகவும் ரசிகர்கள், மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கார்த்தி ஏற்கனவே கதை கேட்டு 'ஓகே' செய்து வைத்திருந்த ஒரு படத்தை ஆண்டுக்கணக்கில் தள்ளிப் போட்டதால், இயக்குநர் ஒருவர், கடும் 'அப்செட்'டில் இருப்பதாக, தகவல் வெளிவந்துள்ளது. 

'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களின் மூலம், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ராஜூ முருகன், தற்போது கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே இது குறித்த அறிவிப்பு வெளியாகி, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையிலும், இந்த படம் எப்போது தொடங்கப்படும் என்று யாருக்கும் தெரியவில்லை. கண்பார்வையற்ற காதல் ஜோடியை கொண்ட 'குக்கூ' படமும், மக்கள் பிரச்னைகளை தீர்க்க போராடும் மனநலம் பாதித்த மக்கள் ஜனாதிபதியாக வலம்வரும் சோமசுந்தரம் நடித்த 'ஜோக்கர்' படமும், ராஜூ முருகன் இயக்கத்தில், பலரது கவனத்தை ஈர்த்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், கார்த்தியின் நடிப்பில் உருவான படங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தது. இப்படியே ஒரு ஆண்டு சென்று விட்டது. இதை அடுத்து, ராஜுமுருகன் அவரிடம் மீண்டும் இந்த படத்தை ஆரம்பிப்பது பற்றி கேட்டிருக்கிறார். ஆனால், அந்த சமயத்தில் ராஜூ முருகனுக்கு உடல்நல பிரச்சனை காரணமாக, சிறிது காலம் இந்த படப்பிடிப்பு தள்ளிப் போனது. அதன்பிறகு கார்த்தி, கொஞ்சம் 'பிஸி'யாகி விட்டார்.

மேலும் கார்த்தி 'சர்தார்' 2ம் பாகம் படத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. இதனால் கார்த்தியை பிடிப்பதே, இயக்குனருக்கு குதிரைக்கொம்பாக இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட இந்த படத்துக்காக, ராஜு முருகன் ஒரு ஆண்டாக காத்திருக்கிறார். ஆனால் கார்த்தி, பல படங்களில் 'பிஸி'யாக இருந்ததால், இந்த படத்தை ஆரம்பிப்பதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டது. அடுத்தடுத்த வெற்றியால் கார்த்தி, ராஜூ முருகனை கண்டுக்காமல் போய்விட்டதாகவும் திரை உலகில் கிசுகிசுக்கப்பட்டது.


அதனால், இன்னும் எத்தனை மாதம் காத்திருக்க வேண்டுமோ என்று நொந்து போயிருந்த இயக்குநருக்கு, கார்த்தியின் மூலம் ஒரு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. அதாவது கார்த்தி, ராஜுமுருகன் கூட்டணியில் உருவாகும் 'ஜப்பான்' படம் தற்போது பூஜையுடன் ஆரம்பமாகி இருக்கிறது. அனு இம்மானுவேல் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனால் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் ராஜு முருகன், விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடியில் ஆரம்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News