ரக்சிதா செயலால், தேம்பி தேம்பி அழுத ராபர்ட் மாஸ்டர்

bigg boss tamil robert master trolls- ராஜா ராணி விளையாட்டில், ரக்சிதா தன்னிடம் உண்மையை சொல்லாமல் ஏமாற்றி விட்டதாக, ராபர்ட் மாஸ்டர் தேம்பி தேம்பி அழுதார்.

Update: 2022-11-19 09:46 GMT

bigg boss tamil robert master trolls - தேம்பி தேம்பி அழுத ராபர்ட் மாஸ்டரை சமாதானப்படுத்தும் அசீம்.

bigg boss tamil robert master and rachitha, bigg boss tamil robert master trolls- ராஜா ராணி 'டாஸ்க்'கின் போது ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, ராபர்ட் மாஸ்டர் கதறி அழுததை நெட்டிசன்கள் 'ட்ரோல்' செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுத்த முதல் நாளில் இருந்தே, நடிகை ரச்சிதாவிற்கு நூல்விட்டு வருகிறார் ராபர்ட் மாஸ்டர். அவருடன் நட்புடன் பழகி வந்த ரச்சிதா, ஒரு கட்டத்தில் 'நீங்க எனக்கு அண்ணன் மாதிரி' என, வெளிப்படையாக சொல்லிவிட்டார். அதன்பின்னரும் விடாமல், பின் தொடர்ந்து ரக்சிதாவுக்கு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறார் ராபர்ட்.


இந்த வாரம் முழுக்க நடைபெற்ற அரண்மனை ராஜா - ராணி 'டாஸ்க்'கில் ராபர்ட் ராஜாவாகவும், ரச்சிதா ராணியாகவும் வேடமணிந்து பங்கேற்றனர். இதில் பிக்பாஸ் ரச்சிதாவுக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கின் படி, அவர் வீட்டில் இருந்த நகைகளை மன்னருக்கு தெரியாமல் திருடி வைக்க வேண்டும். பிக்பாஸ் கொடுத்த இந்த சீக்ரெட் டாஸ்க்கை, அசீம் மற்றும் கதிரவனுடன் சேர்ந்து செய்தார் ரச்சிதா.


இந்த டாஸ்க் முடிந்ததும், அவர்கள் எவ்வாறு நகைகளை திருடினார்கள் என்பதை 'வீடியோ'வாக போட்டு காட்டினர். அதைப்பார்த்த பின்னர் 'அப்செட்' ஆன ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி கதறி அழுதார். இதுகுறித்த  காட்சிகள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அதில், ரச்சிதா ராபர்ட் மாஸ்டரிடம் பேசி சமாதானம் செய்ய முயன்ற போதும், 'தயவு செஞ்சு என்னிடம் பேசாத' என கூறிவிடுகிறார் ராபர்ட். குயின்சி, ஆயிஷா உள்ளிட்ட மற்றவர்களும், ராபர்ட் மாஸ்டரை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர். அசீம், தேம்பி தேம்பி அழும் ராபர்ட் மாஸ்டரை ஆறுதல் கூறி, ஆசுவாசப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில், ரக்சிதா மனம் நொந்துபோய், பாத்ரூமுக்குள் சென்று கதறி அழுகிறார். அவரை சமாதானம் செய்ய மைனா நந்தினி முயற்சிக்கிறார்.


இதைப்பார்த்த நெட்டிசன்கள் ராபர்ட் மாஸ்டரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். 'இவரென்ன லவ் பெயிலியர் ஆனவர் போல் இப்படி அழுகிறார்? இதெல்லாம் பார்ப்பதற்கு சிரிப்பாகவும், ஒருபுறம் எரிச்சலாகவும் உள்ளது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராபர்ட் மாஸ்டர் மன்னராக உள்ள நிலையில், அவரது நாட்டில், அரண்மனை கஜானா பொக்கிஷங்கள் களவாடப்படுகிறது. இதற்கு, ராணியாக உள்ள ரக்சிதாவும் உடந்தையாக செயல்படுகிறார். நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததால், ராஜாவான ராபர்ட்டை ராஜகுருவாக உள்ள விக்ரமன், பதவி இறக்கம் செய்து, காட்டுக்குள் செல்லுமாறு இறுதியில் கூறுகிறார். அந்த காட்சிக்கு பின், அந்த டாஸ்க் முடிவடைந்ததாக, பிக்பாஸ் அறிவிக்கிறார்.


'இந்த போட்டியை பொருத்தவரை, செயல்படாத, தகுதியற்ற ஒரு மன்னனாக நான் பதவியை இழக்கிறேன். கடைசியில் காட்டுக்கு செல்கிறேன். அதற்கு காரணம், அரண்மனை கஜானா பொக்கிஷங்கள் களவாடப்பட்டதுதான். இதற்கு உடந்தையாக செயல்பட்ட ராணி ரக்சிதா, என்னிடம் உண்மையை மறைத்து, என்னை ஏமாற்றி விட்டார்,' என்று, ராபர்ட் மாஸ்டர் அழுகிறார். ஒரு கோணத்தில், அவரது வேதனையில் நியாயம் இருந்தாலும், இது ஒரு விளையாட்டுக்களம். அவரவர் வெற்றியே முக்கியம். அது புரியாமல், ராபர்ட் மாஸ்டர் குழந்தைத்தனமாக அழுவதாக, நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News