'5 ஆயிரம் என்றாலும், பணப்பெட்டியை சந்தோஷமாக எடுத்திருப்பேன்,' - பிக்பாஸ் கதிரவன் 'பகீர்'

bigg boss kathiravan interview- ‘பிக்பாஸ் வீட்டில் இருந்து, மனநிறைவுடன், மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைக்க, கிளம்ப நினைத்திருந்தேன். அதனால், 3 லட்சம் அல்ல, 5 ஆயிரம், 10 ஆயிரம் என்றாலும், பணப்பெட்டியை சந்தோஷமாக எடுத்திருப்பேன்’, என்று கூறுகிறார் கதிரவன்.

Update: 2023-02-01 09:16 GMT

bigg boss kathiravan interview - பிக்பாஸ் சீசன் 6  போட்டியாளர் கதிரவன். (கோப்பு படம்)

bigg boss kathiravan interview -    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த கதிரவன், சேனல் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து, அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.


தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 சமீபத்தில் நிறைவடைந்தது. ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக சென்ற பிக்பாஸ் போட்டியில் ஒருகட்டத்தில் அசீம், விக்ரமன், ஷிவின், மைனா, அமுதவாணன் மற்றும் கதிரவன் ஆகியோர் எஞ்சி இருந்தனர். அப்போது, பிக்பாஸ் வீட்டுக்குள் பணமூட்டை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் பணமூட்டையுடன் வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்த நிலையில், கதிரவன் அந்த பணமூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்து அனைவரையும் அதிரவைத்தார்.


பின்னர் தான் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை எனவும், இத்தனை தூரம் வந்ததே தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கமலிடம் பினாலே-வின் போது கதிர் சொல்லியிருந்தார். இந்நிலையில், கதிர் ஒரு சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய பிக்பாஸ் அனுபவங்கள் குறித்தும், தன்னுடைய முடிவுகள் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.


அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து பணமூட்டையுடன் வெளியேறியது ஏன்? என கதிரவனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,"நான் டைட்டில் ஜெயிச்சு இருந்தாலும் அதை என்வீட்டுல வச்சுக்குற ஒரு பொருளா தான் இருந்திருக்கும். ஆனா, மக்களோட மனசை ஜெயிக்கிறது தான் முக்கியம். நான் வெளியே வந்த பிறகு நெறய பேரு என்னோட பேசுனாங்க. நல்லா விளையாடுனீங்க, சூழ்நிலையை சரியா புரிஞ்சுகிட்டு நடந்துகிட்டீங்க-ன்னு சொன்னாங்க. அதுவே எனக்கு போதும்" என்றார்.


மேலும், சரியான தருணத்திற்காக காத்திருந்ததாக கூறிய அவர்"ஒவ்வொரு வாரமும் யாராவது வெளியே போகும்போதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடும். நல்ல வேளையா அப்போது எல்லோரும் திரும்பி உள்ள வந்திருந்தாங்க. நான் உள்ள வந்தது சில இடங்கள்ல எப்படி நடந்துக்கணும்னு காட்டத்தான். அதோட என்னோட போட்டி தன்மை மற்றும் மக்களை மகிழ்விக்க மட்டுமே. அதை நான் சரியா செஞ்சேன்னு தோணுச்சு. வெளியே போன எல்லா போட்டியாளர்களும் உள்ள வந்தாங்க. அந்த தருணத்துக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போவே போதும்னு முடிவு எடுத்துட்டேன்" என்றார்.

''பிக்பாஸ் வீட்டில், நான் ஆத்திச்சூடி பாடியது, பயங்கர டிரெண்டாகி விட்டது. ஆனால், இப்போதும் இரண்டு வரிகளுக்கு மேல் எனக்கு ஆத்திச்சூடி தெரியாது. அப்போது, ஏஞ்சல் டாஸ்க் போய்க்கொண்டு இருந்தது. அப்போது, உப்பு போடாத கஞ்சி மட்டுமே உணவாக எங்களுக்கு தரப்பட்டது. கடும் பசியால், புத்தியே 'பிளாங்க்' ஆகி விட்டது. அதுபோல், ஒரு ஆண்டுக்கு, எத்தனை திங்கட்கிழமை என்பதைக்கூட தவறாக சொல்லி விட்டேன். 52 திங்கள் என்பது கூட, பள்ளியிலேயே படித்ததுதான். அதுகூட நினைவுக்கு வரவில்லை.


என்னைப் பொருத்த வரை, மக்கள் மனதில் இடம்பெற்று விட்ட மனநிறைவே போதும். பணம் முக்கியமில்லை. அதனால்தான், 3 லட்சம் ரூபாய் வைத்தவுடன், எடுத்து விட்டேன். அதுமட்டுமல்ல, 5 ஆயிரம்,  10 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தாலும் அதுவே போதும் என்று எடுத்துக்கொண்டு கிளம்பியிருப்பேன். வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும், என்னை வழியனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதுவே நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது,'' என்றும் கதிரவன் பேட்டியில் கூறியிருக்கிறார்.  

Tags:    

Similar News