ரூ. 3 லட்சம் பணத்துடன் கிளம்பிய கதிரவன்; பிக்பாஸ் வீட்டில் 'ஷாக்'

bigg boss 6 tamil finalist- பிக்பாஸ் வீட்டில், பணப்பெட்டி டாஸ்க்கில், இம்முறை ரூ. 3 லட்சத்துடன் கதிர் வீட்டுக்கு கிளம்பியது, சக போட்டியாளர்களை, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Update: 2023-01-18 08:38 GMT

bigg boss 6 tamil finalist-ரூ. 3 லட்சம் பணத்துடன், பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய கதிரவன்.

bigg boss 6 latest update, bigg boss 6 tamil finalist- விஜய் டிவியில் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வருகிறது. கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 100 நாட்களை கடந்துவிட்டது. விரைவில் இந்த நிகழ்ச்சியின் கடைசி நாள் வரப்போகிறது, அந்த நாளுக்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங், யார் 6வது சீசன் பட்டத்தை வெல்லப்போவது என்ற விவரத்தை அரிய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடைசியாக பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து ADK வெளியேறி இருந்தார்.  வெளியேறிய ரக்சிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் ரசிகர்கள் எதிர்பார்த்த பணம் மூட்டை போட்டியாளர்கள் முன்பு வைக்கப்பட்டு,  ஏற்கனவே கூறியது போல பணமூட்டையை கதிர் தூக்கிக் கொண்டு வெளியேறி விட்டார். 


பிக் பாஸ் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. கடைசி வாரத்தை எட்டி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு முன்னேறி இருக்கின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து எவிக்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள், மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்திருக்கின்றனர் பிக் பாஸ் வீடு மீண்டும் களைகட்டி இருக்கும் நேரத்தில் இன்று எதிர்பாராத சில நிகழ்வுகளும் நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ரச்சிதா இன்று, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

ஒரு சில நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் வந்த வண்ணமாக இருந்த நிலையில் ரச்சிதா வரவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அந்த குறை நிவர்த்தியாகி இருக்கிறது. ரச்சிதாவும் ஆயிஷாவும் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றனர். இந்த நிலையில் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு, அங்கே பணமூட்டை வைக்கப்பட்டது. அதை உள்ளே இருக்கும் ஆறு போட்டியாளர்களில் யார் எடுக்க போகிறார்கள் என்று ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் பண பெட்டி டாஸ்க்காக காத்திருக்கும் கதிரவன், இந்த முறை இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பணமூட்டையோடு வெளியேறி இருக்கிறார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு மீம்ஸ்களும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஆரம்பத்தில் இருந்து அசீம் முதலில் 'பணப்பெட்டியில் 40 லட்சத்திற்கும் மேலே இருந்தால், நான் எடுத்துக் கொண்டு சென்று விடுவேன்,' என்று கூறியிருந்தார். அவரை தொடர்ந்து கதிரவனும் மற்றும் மணிகண்டன் 'பண பெட்டியில் எதிர்பார்த்த அளவு தொகை வந்தால் நான் தூக்கி விடுவேன்' என்று கூறியிருந்தனர்.


அந்த வகையில் இன்று பணமூட்டையை இறுதியில் கதிரவன் தூக்கிக்கொண்டு சென்று விட்டார். இதில், கொடுமை என்னவென்றால், வெறும் மூன்று லட்சம் ரூபாய்க்கே, கதிரவன் பணமூட்டைக்கு 'ஓகே' சொன்னதுதான். அடுத்தடுத்து டாஸ்க் கட்டணம் உயர்த்தப்பட்டு, 25 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்க வேண்டிய சூழ்நிலையில், முதல் தடவையாக வைக்கப்பட்ட மூன்று லட்சம் ரூபாயுடன் கதிரவன் கிளம்பியது, சக போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.


இந்நிலையில் விக்ரமன், அசீம், ஷிவின், அமுதவாணன், மைனா என ஐந்து போட்டியாளர்களும் இறுதிப்போட்டியாளர்களாக கடைசி வாரத்தில் உள்ளே நுழைய இருக்கின்றனர். 

Tags:    

Similar News