'வெண்பாவால் மீண்டும் ஹேமாவுக்கு ஆபத்தா?' - பரபரப்பான கட்டத்தில் 'பாரதி கண்ணம்மா'

Bharathi Kannamma Today Promo-வெண்பாவால் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட ஹேமாவுக்கு, மீண்டும் வெண்பாவால் ஆபத்து ஏற்படுமோ, என்ற பரபரப்பாக கட்டத்தில், விஜய் டிவியில் இன்று ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடு ஒளிபரப்பாகிறது.

Update: 2022-12-03 09:12 GMT

Bharathi Kannamma Today Promo

Bharathi Kannamma Today Promo-விஜய் டிவியில் 'சூப்பர் ஹிட்'டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் 'பாரதி கண்ணம்மா'. அந்த வகையில் இன்றைய தினம் என்ன நடந்தது என்றால்,  கடத்தல் கேஸ்சில் போலீஸ் தன்னை கைது செய்து கொண்டு போவது போல, வெண்பா கனவு காண்கிறார்.

இதனால் திடுக்கிட்டு எழும்பும் வெண்பா கதற, வேலைக்காரி சாந்தி வந்து, 'என்னம்மா? என்னாச்சு?' என்று கேட்டு, குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கிறார். பின்பு வெண்பா, 'ஹேமாவைக் கொலை செய்திருக்கலாம்,' என்று கூறி, கையில் இருந்த கிளாசை எறிந்து விடுகிறார். இதனால் கையில் காயம் ஏற்பட்டு விட, சர்மிளாவும் ரோஹித்தும் ஓடி வந்து, வெண்பாவை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகின்றனர்.

பின்னர் வேணுவும், சவுந்தர்யாவும் பேசிக் கொண்டிருக்கும் போது, 'ஹேமாவை கடத்தியது யார் என்று, அகிலன் கண்டுப்பிடித்து விட்டானா?' என்று வேணு கேட்கிறார்.அதற்கு சவுந்தர்யா, இப்போதுதான் விசாரணை நடந்து கொண்டிருப்பதைப் பற்றியும், பாரதி தன்னிடம் போன் பண்ணி பேசியது குறித்தும் கூறுகிறார்.

மேலும், 'பாரதி வரட்டும். அவனுக்கு புரிய வைப்போம்,' என பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்து வெண்பா, ஹாஸ்பிடலில் இருக்கும் போது, சாந்தி பதற்றமாக வந்து, ஹேமாவும் இந்த ஹாஸ்பிடலில் தான் 'அட்மிட்' ஆகியிருப்பதாக கூறுகிறார்.மேலும், 'உங்கள் ராசிக்கு இந்த மாதம் முழுவதும், கெட்டது நடக்கும் என்றுதான் போட்டிருக்கு. நீங்கள் மறுபடியும் ஜெயிலுக்கு போய்டுவீங்களோ? என்று பயமாக இருக்கு,' என்று கூற, வெண்பா சிரிக்கிறார்.

அதன்பின்னர் லட்சுமி, சவுந்தர்யாவிடம் சென்று, 'அப்பாவும், அம்மாவும் ஏன் பிரிஞ்சிருக்கிறாங்க. அப்பா ஏன் என்னையும் ஹேமாவையும் வெறுக்கிறார். பெரியவங்களோட சண்டையை, ஏன் சின்னப்பிள்ளைகள் எங்ககிட்ட காட்டுறாங்க,' என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கிறார்.

ஆனால் லட்சுமியிடம் உண்மையை சொல்லாமல் வேணு, லட்சுமிக்கு 'அட்வைஸ்' செய்கிறார்.இருந்தாலும் லட்சுமி, 'அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சதற்கு என்ன காரணம்' என்று கேட்டு அழுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிகிறது.

லட்சுமி, ஹேமா இருவரும் தன்னுடைய மகள்தான் என்பதை, டில்லி சென்று டாக்டர் ரிப்போர்ட் மூலம் உறுதியாக அறிந்துகொண்ட பாரதி, விரைவில் சென்னைக்கு திரும்பும் நிலை உள்ளது. கணவன் - மனைவி பிரிவுக்கு முக்கிய அடிப்படை காரணமான இந்த விஷயத்தில், ஒரு தெளிவான முடிவு கிடைத்து விட்டதால், பாரதி - கண்ணம்மா இருவரும் மீண்டும் இணைவது விரைவில் நடக்க வேண்டும் என்பதே, ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், அதே வேளையில் அடுத்தடுத்து வெண்பா செய்யும் அடாவடி சம்பவங்களால், சீரியல் இன்னும் வளர்ந்து கொண்டே போவது, ரசிகர்களை அதிருப்தியடைய வைக்கிறது. 

ஒருவேளை, பாரதி டில்லியில் இருந்து திரும்பி வர முடியாத சூழலோ, அல்லது லட்சுமி, ஹேமா இருவருமே என் குழந்தைகள் தான் என்ற உண்மையை சொல்ல முடியாதபடி, திடீர் 'டிவிஸ்ட்' உருவானால், இன்னும் பல மாதங்களுக்கு 'பாரதி கண்ணம்மா', நீடிப்பதை தவிர்க்க முடியாது. என்ன நடக்க போகிறது? என்பதால், இந்த சீரியல் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News