ரூ. 2 கோடி விலையில் புதிய கார் வாங்கிய ஏ ஆர் ரகுமான் மகள்கள்

ar rahman daughter- ‘இசைப்புயல்’ ஏ ஆர் ரகுமானின் மகள்கள் கதீஜா மற்றும் ரஹிமா இருவரும் சேர்ந்து ரூ. 2 கோடி விலை கொண்ட புதிய எலக்ட்ரிக் கார் வாங்கியிருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2022-12-03 07:50 GMT

ar rahman daughter- புதிதாக வாங்கிய சொகுசு காரின் முன்பு நின்று ‘போஸ்’ கொடுத்த ஏ.ஆர் ரகுமான் மகள்கள்.

ar rahman daughter, A R Rehman's Daughters Buy New Porsche Taycan- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது வென்று, இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர். அவர் தற்சமயம் தென்னிந்திய படங்களுக்குதான் அதிகமாக இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். அவர்களும் தற்போது இசைத்துறையில் தான் பயணித்து வருகின்றனர்.


சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இரண்டு மகள்களும் சேர்ந்து, ஒரு சொகுசு கார் வாங்கி இருக்கிறார்கள். அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத 'எலெக்ட்ரிக்' கார் என ரகுமான் தெரிவித்து இருந்தார். அந்த கார் Porsche நிறுவனத்தின் தயாரிப்பாகும், அதன் விலை  2 கோடி ரூபாயை விட அதிகம் என கூறப்படுகிறது. ரகுமானின் மகள்கள் அந்த கார் முன்பு நின்று எடுத்திருக்கும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏ ஆர் ரகுமான் மகள்கள் வாங்கியுள்ள இந்த கார் குறித்த தகவல்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவை உலக மக்களுக்கு எடுத்துச்சென்று தமிழ் இசையின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டவர் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான். இவர் தற்போது "லாம் சலாம்" படத்தில் பாடல்களை இயக்குவதுதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார்.


இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகளான ஜஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா ப்ரொடெக்சன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இப்படத்திற்கு இசையமைப்பதில் ரகுமான் மும்முரமாக இறங்கியுள்ளார்.  இப்படி இசையமைத்து கொண்டே 'சோசியல் மீடியா'க்களில் 'ஆக்டிவ்' ஆக இருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய மகள்கள் வாங்கியுள்ள விலை உயர்ந்த காரின் புகைப்படத்தை தனது 'சோசியல் மீடியா' பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.


இசை புயல் ஏஆர் ரகுமானுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகளில் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் இருவரும் கார் அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். இவர்கள் இருவரில் கதீஜா ரகுமான் இசைக்கலைஞர் மற்றும் ஏ ஆர் ரகுமான் அறக்கட்டளை இயக்குனராக உள்ளார். மற்றவர்கள் இயக்குனர், பாடல் , தயாரிப்பு என பல துறைகளில் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் தான், கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் இந்த எலெக்ட்ரிக் காரை வங்கியுள்ளதாக தன்னுடைய 'சோசியல் மீடியா'வில் ஏஆர் ரகுமான் பதிவிட்டிருந்தார். இவர்கள் வாங்கியுள்ள கார், தற்போது இந்தியாவில் கிடைக்கும் மிக அதிக விலையுள்ள எலெக்ட்ரிக் காராக உள்ளது.

இந்த கார் 'போர்ஷே' நிறுவனமானது, 18 விதமான கார் வகைகளாக தயாரித்து வருகிறது. இந்த வகைகளில் 'ப்ளூ மெட்டாலிக்' வகையான காரை வாங்கியுள்ளனர். இந்த கார்களின் ஷோரூம் விலை மட்டும் 1.5 லிருந்து 2.5 கோடி ருபாய் இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விலையானது, எக்ஸ் ஷோரூம் விலை மட்டும்தான். அப்படி என்ன இந்த காரில் இருக்கிறது என்றால், இந்த கார் முன்பக்கம் மற்றும் பின் பக்கம் என இரு பக்கங்களிலும் தனித்தனியாக எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பயனார் கார்கள் 'டர்போ' வகைகளுடன் கிடக்கிறது. 

Tags:    

Similar News