கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நடிகை ரோஜா

Guinness World Record -திரைப்பட முன்னாள் நடிகையும், ஆந்திர அமைச்சருமா ரோஜா புதிய சாதனை படைத்து வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

Update: 2022-08-01 05:13 GMT

Guinness World Record - நடிகை ரோஜா 90களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக மாறினார் . பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

சின்னத்திரையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த ரோஜா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைந்தார். அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது

இந்நிலையில் தற்போது கின்னஸ் சாதனையும் பதிவு செய்துள்ளார். ஒரே நேரத்தில் 3000 புகைப்படக் கலைஞர்கள் இவரைப் படம் பிடித்துள்ளனர். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கு முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி ஆந்திரா , தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் புகைப்படக் கலைஞர்கள் விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்துக்கு வந்தனர். இந்த சாதனைக்காக மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையைச் சுற்றி புகைப்படக் கலைஞர்கள் கேமராவுடன் தயாராக நின்றனர்.


அந்த இடத்திற்கு வந்த ரோஜா பிளாட்பாரத்தில் ஏறினார். ரோஜா ஓகே சொன்னதும் ஒரே கிளிக்கில் 3000 போட்டோகிராபர்கள் ரோஜாவை போட்டோ எடுத்தனர். அமைச்சரின் இந்த சாதனை இதுவரை யாரும் இதுபோன்ற சாதனையை செய்யாததால் ரோஜா 'வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.Roja got a place in Guinness book of ரெகார்டஸ்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News