கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டண கால அவகாசம் தேவை இருக்காது. அமைச்சர்

Update: 2021-06-15 06:02 GMT

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தேவைப் படாது என நினைக்கின்றேன் மேலும் அப்படி தேவைப்பட்டால் அது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்

கரூரில் தமிழக அரசின் நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான பொருட்கள் மற்றும் நிவாரண உதவி தொகை ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது மேலும் தனியார் நிறுவனங்கள் அரசு ஊழியர்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்சமயம் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தேவையில்லை என நினைக்கின்றேன். கால அவகாசம் தேவை என்றால் அது குறித்து முதல்வர் முதலமைச்சர் அறிவிப்பார். மேலும் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அதிமுக ஆட்சியில் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அப்பொழுது பாமக தலைவர் ராமதாஸ் அதுகுறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோல பாஜகவினரும் இப்பொழுது டாஸ்மாக் கடைகளை மூட ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர் அவர்கள் முதலில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கட்டும். பிற மாநலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வருவது, கள்ளச் சாராயம் போன்றவற்றை தடுக்க, 27;மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

Similar News