திருவண்ணாமலையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி

திருவண்ணாமலையில் காவலர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா பயிற்சி அளிக்கப்பட்டது

Update: 2021-06-27 07:52 GMT

திருவண்ணாமலையில் காவலர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா பயிற்சி அளிக்கப்பட்டது

பெரும்பாலான காவலர்கள் படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் உழல்கின்றனர். முக்கியமாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்கவில்லை. இதனால், ஏற்படும் மன அழுத்தம் தற்கொலைக்கும் இளவயது மரணங்களுக்கும் காரணமாகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

இதிலிருந்து விடுப்பட யோகா பயன் தரும் என்பதால் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.சீனிவாசன் அவர்களின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன், இன்று காலை யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News