திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஏலம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சாராய வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஏலம் விடப்பட்டது

Update: 2021-09-28 13:24 GMT

சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஏலம் விடப்படும்..  அதன்படி சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 180 வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஆயுதப்படை வளாகத்தில் இன்று ஏலம் விடப்பட்டது.

ஏலம் எடுப்பதற்காக ஆன்லைனில் பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி ஏராளமானோர் கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர் . பதிவு செய்தவர்கள் அனைவரும் இன்று நடந்த ஏலத்தில் பங்கேற்றனர்.  அவர்களின் விவரங்களை போலீசார் சரிபார்த்து ஏலத்தில் பங்கேற்க அனுமதித்தனர்.  வாகனங்களை பலர் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

Tags:    

Similar News