இருசக்கர வாகனம் திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது

திருவண்ணாமலை மாடவீதியில் இருசக்கர வாகனம் திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்

Update: 2022-07-24 13:15 GMT

திருவண்ணாமலை பள்ளிகொண்டாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42), விவசாயி. இவர் மாலை திருவண்ணாமலை மாடவீதியில் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்று இருந்தார். பின்னர் வந்து பார்க்கும்போது அவரது மோட்டார் சைக்கிளை 3 சிறுவர்கள் திருட முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டவே,  அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயன்றதில் ஒரு சிறுவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேர் சிக்கினர்.

பின்னர் அவர்களை திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட 2 சிறுவர்களில் ஒருவருக்கு 17 வயதும், மற்றொருவருக்கு 16 வயதும் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிறுவனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News