திருவண்ணாமலையில் மீண்டும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வரும் திங்கட்கிழமை முதல், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என, ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2021-10-01 06:58 GMT

இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்,  மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், பொதுமக்கள்  ஒவ்வொரு வாரமும் அதிகாரிகள் மனுக்களை பெறாததால் பெட்டியில் மனுக்களை அளித்து வந்தனர். 

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை,  சமீபத்தில் அறிவித்துள்ள தமிழக அரசு குறைதீர்வு கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News