அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 20 லட்சம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் வருமானம், ரூ1 கோடியே 20 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்

Update: 2022-03-11 01:23 GMT

திருவண்ணாமலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு,  தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்து வருகின்றனர். 

அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு,  எண்ணப்பட்டது.

இதில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 39 ஆயிரத்து 202 ரொக்கம், 372 கிராம் தங்கம், 2 கிலோ 259 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Tags:    

Similar News