போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருவண்ணாமலை தேரடி வீதி
திருவண்ணாமலை நகர பிரதான சாலையான தேரடி தெருவில் போக்குவரத்து இடையூறு காரணமாக வாகனங்கள் நீண்ட தூரம் காத்து நின்றன
திருவண்ணாமலை பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேல் கடைகள் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் காலையிலேயே பொருட்களை வாங்க கடைத்தெருவிற்கு வருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது மாலையில் ஊரடங்கு உத்தரவு என்பது கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காகவும், பொது மக்களை காப்பதற்கும் தான். ஆனால் அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியின்றி பொது மக்கள் வந்து செல்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.