திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம்

Update: 2021-06-04 07:51 GMT

குடும்ப அட்டை மாதிரி படம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வழங்கப்படும் ரேஷன் பொருட்களோடு 5ம் தேதி முதல் 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலை  மாவட்டத்தில் ஏழரை லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.  ஊரடங்கு காலத்தில்  13 பொருட்கள் அடங்கிய  தொகுப்பினை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு பொருட்களுக்கான தொகுப்பினை வழங்க  அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று டோக்கன் கொடுக்கும்  பணி இன்று முதல் துவங்கியது.

வழங்கப்படும் டோக்கன்களில் என்றைக்கு  வரவேண்டும் என்ற தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதியில் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பொருட்களை பெறுவதற்கு மக்கள் கூட்டமாக வரத்தேவை இல்லை. அந்தந்த தேதியின்படி சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

Tags:    

Similar News