திருவண்ணாமலையில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெரிய நந்திக்கு சித்திரை மாத சனி மகா பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2021-04-25 06:05 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு ஒவ்வொரு பிரதோஷ விழாவும் சிறப்பாக நடைபெறும். பிரதோஷத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சனி மகா பிரதோஷம். நேற்று சனி பிரதோஷ தினம் என்பதால், கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

சித்திரை மாத சனி பிரதோஷத்தினையொட்டி பெரிய நந்திக்கு பால்,தயிர், வெண்ணை, விபூதி, சந்தனம், பன்னீர்,தேன், ஆகியவற்றினை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் நந்தி பகவானுக்கு வண்ண மலர்கள்,அருகம்புல் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News