திருவண்ணாமலை எம்பி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

தமிழ்நாட்டில் வசிக்கும் குறும்பா, குறும்பர்,குருமன்ஸ் இன பழங்குடியினர்பட்டியலில் சேர்க்க திருவண்ணாமலை எம்பி கோரிக்கை

Update: 2021-08-08 05:34 GMT

மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  தமிழ்நாட்டில் வசிக்கும் குறும்பா, குறும்பர்,குறும்மன், குறும்ப கவுண்டர் அனைவரையும் பழங்குடியினர்  பட்டியலில் சேர்க்க கோரி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை,  மத்திய  பழங்குடியினர் நல அமைச்சர்  அர்ஜுன்முண்டாவை  அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது . குறும்பர் இன மக்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.  

Tags:    

Similar News