திருவண்ணாமலை: அருணாசலேசுவரர் கோவிலில் மாசி மாத சோமவார பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று 14.2.2022 மாசி மாத பௌர்ணமி, சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-02-14 13:03 GMT

ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று 14.2.2022 மாசி மாத பௌர்ணமி, சோமவார  பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது. 

திருவண்ணாமலையில், புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், மாசி மாத பிரதோஷ விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதை தொடர்ந்து, ஐந்தாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார்  கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய   அரசியல் பிரமுகர்கள்,  திரையுலக நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் வருவதுண்டு. இன்று பிரதோஷ நாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் இளைய மருமகன் விசாகன் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்தார்.

Tags:    

Similar News